அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறுகிறது.
5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வி, ஞானம் பெறலாம்.
9 நெய் விளக்கு ஏற்றினால் நவகி ரக தோஷம் நீங்கும்.
12 நெய் விளக்கு ஏற்றினால் வேலை யில் தடை நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும்.
27 நெய் விளக்கு ஏற்றினால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும்.
48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.
108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்ஷம் பெறலாம்.
நெய் விளக்கு ஏற்றிய பின்னர் பக்தர்கள் அம்மனை வணங்க வேண்டும். அதனை தொடர்ந்து கோவில் பிரகாரத்தை 3 முறை வலம் வந்தால் அவர்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.