குவாந்தான், மார்ச் 19-
ஜோகூர் பாருவிலிருந்து புறப்பட்டு குவாந்தான் நோக்கிப் புறப்பட்ட பயணிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.
இப்பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளின் விபரமும் குவாந்தான் சீகாதாரா அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (16.3.2020) இரவு 7.45 மணிக்கு லார்க்கின் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து மெர்சிங் எண்டாவு பேருந்து நிலையத்தில் களைப்பாறுவதற்காக நிறுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
இதுகுறித்த மேல் விவரங்கள் ஏதும் கிடைக்கப்பெற வில்லை.