மருத்துவப் பணியாளர்களுக்கு தமிழக சட்டசபையில் பலத்த கரவொலி

சென்னை –

கொரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 22ஆம் தேதி பொதுமக்கள் கரவொலி எழுப்பினர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளில் அர்ப்பணிப்போடு, தங்களை ஈடுபடுத்தி பணிபுரிகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதற்கு துணையாக செயல்படுகின்ற பிற துறைகளின் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here