பெட்டாலிங் ஜெயா,ஏப்ரல் 23-
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் தப்பி வெளியேறாமல் இருப்பதை உறுதிசெய்யும் வரை அரசாங்கம் மேம்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை (EMCO) அறிவிக்கவில்லை.
மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், ஏற்கனவே கோவிட் -19 தொற்று பாதிப்பை அடையாளம் கண்டுள்ள பகுதிக்கு வெளியே பரப்புவதால் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க இது மிகவும் முக்கியமானது என்றார்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் EMCO விதிக்கப்படும் போது, அதற்கு முன்னர் எந்த அறிவிப்புகளும் இல்லை என்று பலர் எங்களிடம் கேட்டிருக்கிறார்கள்.
நாங்கள் வழக்கமாக செய்வது, மறுநாள் அறிவிப்பதற்கு முன்னர், அந்த பகுதியை இரவில் சுற்றி நிலைமையை அறிவோம். ஏனென்றால் நாங்கள் முன்பே அறிவித்திருந்தால் அந்த குடியிருப்பலுள்ளவர்கள் வெளியேற முயற்சிப்பர் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று அவர் நேரலையில் ஒளிபரப்பிய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் .