புயல் காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்தன

சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியில்
உடனடியாகத் தீர்வு காணப்பட்டது

போர்ட்டிக்சன் –

ஐந்து நாட்களுக்கு முன் வீசிய கடுமையான மழை மற்றும் புயல் காற்றில் இங்குள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள நான்கு வீடுகளின் கூரைகள் பறந்ததைத் தொடர்ந்து அங்கு வசித்து வந்த குடியிருப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வந்ததைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியில் உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் போர்ட்டிக்சன் ஜாலான் சிப்பாங் சாலையில் அமைந்துள்ள தானாமேரா சைட் சீ குடியிருப்புப் பகுதியில் வீசிய கடுமையான புயல் காற்று மற்றும் மழையில் நான்கு வீடுகளின் கூரைகள் பறந்தன என்று அந்த வீட்டின் உரிமையாளர்களான திருமதி மாரியம்மா செல்லப்பன் (வயது 60), காளியப்பன் நடேசன் (வயது 60), வேல்வழகன் சுப்பிரமணியம் (வயது 37) மற்றும் சுரேஸ் (வயது 40) கூறினர்.

இந்தப் புயல் காற்றில் வீட்டின் கூரைகள் பறந்ததைத் தொடர்ந்து உடனடியாக தனாமேரா சைட் சீ கிராமத்து தலைவர் வோங் கோக் லாயிடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தச் சம்பவத்தை சுவா சட்டமன்ற உறுப்பினர் மைக்கல் ஏக் பார்வைக்குக் கொண்டு சென்றார் என்று செல்வம் சொன்னார்.

மைக்கல் ஏக் உடனடியாக குத்தகையாளரை நியமித்து புயல் காற்றில் சேதமடைந்த நான்கு வீடுகளும் பழுதுபார்க்கப்படுவதற்கு ஏற்பாடு செய்தார்.

விரைந்து நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் மைக்கல் ஏக் செல்வம், கென்னி, மற்றும் கிராமத்து தலைவர் ஆகியோருக்கு வீட்டின் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here