பிச்சைக்காரன் 2

தமிழ் திரை உலகிற்கு இசையமைப்பாளராக இருந்து நடிகராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி. நான் படத்தின் மூலமாக 2012இல் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. அதன் பிறகு சலீம், இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்களில் நடித்தார்.

2016இல் விஜய் ஆன்டனி நடித்த பிச்சைக்காரன் படம் திரைக்கு வந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் ஆண்டனியின் கெரியரில் பெரிய வெற்றி பெற்றது அது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மார்க்கெட்டிலும் அந்த படத்திற்கு மிக அதிகம் வசூல் கிடைத்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தற்போது கொரோனா லாக்டவுனில் எழுதி வருவதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய சசி தற்போது வேறு படங்களில் பிசியாக இருப்பதால் விஜய் ஆண்டனியே கடந்த நான்கு மாதங்களாக பிச்சைக்காரன் 2 பட கதையை எழுதி வருகிறார் என்று தெரியவந்தது.

இரண்டாம் பாகத்தை இன்னும் அதிக தரத்தில் உருவாக்க திட்டமிட்டு உள்ளாராம். படத்தின் டெக்னிக்கல் குழு பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் கூறியுளளார். அதனால் பல சர்ப்ரைஸ் அறிவிப்புகள் விரைவில் வரலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here