மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா 2ஆம் பாகம்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு பிறகும் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து போர்க்கள காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது என்றும் நடிகர்களின் நெருக்கமான காட்சிகளும் உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதற்கு அதிக எண்ணிக்கையில் பெப்சி தொழிலாளர்களும் தேவைப்படுவார்கள்.

ஊரடங்குக்கு பிறகு படப்பிடிப்புகளில் சமூக விலகலை கடைபிடிக்கவும் அதிகமானோரை படப்பிடிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அரசு விதிமுறைகள் வகுக்கும் என்று தெரிகிறது.

எனவே இடைபட்ட காலத்தில் அரவிந்தசாமியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ரோஜா படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here