ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் கொள்ளை – எழுவர் கைது

டுரோப்பிக்கானா கோல்ப் பகுதியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடு ஒன்றில் புகுந்து பொருட்களைத் திருடிய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்நபர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து வீட்டுப் பொருட்கள் அடங்கிய ஒரு லோரியும் பறிமுதல் செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசால் தெரிவித்தார்.

அந்த லோரியில் ஷோபா இருக்கைகள், தொலைக்காட்சிகள், குளிரூட்டி என 26க்கும் மேற்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் அந்த அடுக்குமாடி வீட்டில் திருடப்பட்ட பொருட்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் 16 வயதிலிருந்து 53 வயதுக்குட்பட்டவர்களாவர். அவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை தொடங்கி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும் அவர் விவரித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here