ஈரம் பேய் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. ஈரம் படம் 2009இல் திரைக்கு வந்தது. கொலையுண்ட ஒரு பெண்ணின் ஆவி தண்ணீர் வடிவத்தில் வந்து கொலையாளிகளை பழிதீர்ப்பதே கதை. இதில் ஆதி, நந்தா, சிந்து மேனன் ஆகியோர் நடித்து இருந்தனர். அறிவழகன் இயக்கி இருந்தார். ஷங்கர் தயாரித்து இருந்தார்.
இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. அறிவழகன் கூறும்போது, ஈரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டம் உள்ளது. இதற்கான கதையை தயார் செய்துள்ளேன். ஷங்கர் தயாரிக்க தயாராகும்போது ஈரம் 2ஆம் பாகம் உருவாகும்“ என்றார்.