உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.  இந்நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது.  தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 91 லட்சத்து 85 ஆயிரத்து 974 பேருக்க்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 37 லட்சத்து 90 ஆயிரத்து 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 888 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.  ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-
அமெரிக்கா – 10,02,929
பிரேசில் – 5,79,226
ரஷியா – 3,44,416
இந்தியா – 2,37,196
பெரு – 1,45,320
சிலி – 2,05,397
இத்தாலி – 1,83,426
ஈரான் – 1,66,427
ஜெர்மனி – 1,75,300
துருக்கி – 1,61,533
மெக்சிகோ – 1,40,118
சவுதி அரேபியா – 1,05,175

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here