MAPS தீம் பூங்காவை நடத்த தனியார் முதலீட்டாளர்களைத் தேடுகிறது பேராக் அரசு

ஈப்போ: மூவி அனிமேஷன் பார்க் ஸ்டுடியோவை (மேப்ஸ்) வழி நடத்த  தனியார் முதலீட்டாளர்களை பேராக் அரசு எதிர்பார்க்கிறது என்று மாநில சுற்றுலா குழு தலைவர் தெரிவித்துள்ளார். தீம் பார்க் இப்போது  மூட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது என்று டத்தோ நோலி ஆஷிலின் மொஹட் ராட்ஸி (படம்) கூறினார்.

தனியார் முதலீட்டாளர்கள் அதன் நிர்வாகத்தை கையகப்படுத்த நாங்கள் தேடுகிறோம், எனவே அது இனி மாநில அரசாங்கத்தின் கீழ் இருக்காது என்று வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இங்குள்ள ஒரு ஹோட்டலில் உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரத்தை ஆரம்பித்த பின்னர் அவர் கூறினார். “பூங்கா மீண்டும் திறக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார். RM520mil தீம் பார்க் இந்த ஆண்டு ஜனவரி இறுதியில் இருந்து மூடப்பட்டுள்ளது. இது  ஜூன் 2017 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது என்றாராவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here