அறிவார்ந்த தொழில்நுட்ப ஆற்றலை மேன்மைப்படுத்தும் வகையில் இந்திய இளைஞர்கள் முற்பட்ட வேண்டும் என்று டேவ் கல்லூரி ஒருங்கிமைப்பாளர் இப்ராகிம் ஷா தெரிவித்தார்.
எதிர்க்கால மேம்பாட்டுக்கு இளைய சமுதாயம் அதன் தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ளும்படி சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தொழில் திறன் கல்வியைப் பயிற்சிகளைக் கற்க முற்பட
வேண்டுமென அவர் கூறினார்.
காஜாங்கில் மஇகா பாங்கி தொகுதி ஏற்பாட்டில் பிடிதீகா மற்றும் எஸ்பிஎம் மாணவர்களுக்கான பின்தங்கிய நிலையிலுள்ள கடைநிலை மாணவர்களை அடையாளம் கண்டு தொழில்நுட்ப கல்வியில் எவ்வாறு மேம்பாட்டு காண உதவும் நோக்கத்துடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இக்கல்லூரியில் பல்வேறுபட்ட துறைகளில் மாணவர்கள் உயர்கல்வியை மேற்கொள்ளும் வழி முறைகளை வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் பிரத்தியேக பதிவுகளில் நேரடியான விளக்கம் மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
பிடிபிடின், மைஐடி, பிடிபிகே கல்வி நிதிவுதவிடன் மேற்கல்வியை மேற்கொள்ளலாம்.
உள்ளூர், வெளியூர் மாணவர்களுக்கு தங்கும் விடுதியில் அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளது.
கடந்த 32 வருடங்களுக்கும் மேலாக 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல வகையான பிரிவுகளில் பட்டப்படிப்புகளை முடித்து தங்களது எதிர்காலத்தை உருவாக்கிவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மஇகா பாங்கி தொகுதி தலைவர் சி. முத்துவேல், துணைத் தலைவர் எம். யோகேஸ்வரன், குபேரன் மற்றும் மஇகா பெறுப்பாளருடன் மாணவர்கள் பங்கேற்றனர்.
எம். அன்பா