இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 15.31 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,669 ஆக உயர்ந்துள்ளது.
9,88,030 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 5,09,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34,193 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மற்றும் 768 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,08,855 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1,77,43,740 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here