திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழாவின் 7 ஆம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரசித்திப் பெற்ற ஆவணித்திருவிழா கடந்த செப்.6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆவணித்திருவிழா 7-ம் நாளான சனிக்கிழமை காலை (செப். 12) சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

கரோனா பொது முடக்கத்தால் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் உள் பிரகாரத்தில் வைத்து நடைபெறுகிறது. முக்கிய விழாவான சனிக்கிழமை (செப். 12) ஏழாம் திருவிழாவை முன்னிட்டு வெட்டி வேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி உள் பிரகாரம் சுற்றி வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சேர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here