குடித்துவிட்டு தினமும் புருஷனை அடித்து சித்திரவதை செய்யும் மனைவி

பெண் ஒருவர் குடித்துவிட்டு தினமும் தனது கணவனை அடித்து துன்புறுத்தும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் மணிநகரைச் சேந்த 29 வயது பெண்ணும், அவரது கணவரும் கடந்த 2018ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். மனைவிக்கு குடிப்பழக்கம் இருந்தது திருமணத்திற்கு பிறகு தான் அவருக்கு தெரிந்தது.

இந்நிலையில் குடிபோதையில் கணவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தினமும் சித்திரவைதை செய்து வந்தார் அப்பெண். துன்புறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. தனது மாமனார், மாமியாரையும் சித்திரவதை செய்து வந்துள்ளார் அவர்.

பின்னர் கணவனின் அலுவலகத்திற்கு சென்றும் போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார் அந்த பெண் . இவ்வளவும் செய்துவிட்டு தன்னை கணவரும், மாமியால், மாமனாரும் கொடுமை செய்கின்றனர் என போலீசிலும் , மகளிர் அமைப்புகளிலும் அந்த பெண் புகார் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இந்த அவரது கணவர் தனக்கும், தனது பெற்றோருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஏதாவது நேரிட்டால் அதற்கு தன் மனைவியே காரணம் என கூறியுள்ளார்.

அவரது இந்த சோக கதையைக் கேட்ட காவல்துறையினர் அவரது மனைவி மீது விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here