பாகுபலி படத்தின் இயக்குனர், ராஜமவுலி தற்போது ராம் சரன் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு நடிகர் சமுத்திரகனி. ‘சம்பளமே வேண்டாம்…’ என்று சொல்லி தான் ஒப்பந்தமானார்,
ஆனால், முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது, சமுத்திரகனியே நினைத்துப் பார்க்காத அளவுக்கு, ஒரு பெரிய சம்பளத்தைக் கொடுத்து இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளார், ராஜமவுலி.
இது குறித்து சமுத்திரகனி. கூறுகையில், , ‘இதுவரை கிடைக்காத அரிய வாய்ப்பு மட்டுமின்றி, இதுவரை வாங்காத சம்பளமும் இந்த படத்தில் எனக்கு கிடைத்துள்ளது…’ என்று, தெரிவித்துள்ளார்.