கோலாலம்பூர்: நாட்டின் பிரதமராக வருவதற்கு தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
“எனக்கு ஒரு வலுவான வல்லமைமிக்க பெரும்பான்மை உள்ளது. ஒரு சிறிய பெரும்பான்மை அல்ல என்று அவர் கூறினார். புதன்கிழமை (செப்டம்பர் 23) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாமன்னரை தனது ஆதரவாளர்களுடன் சந்திக்கவிருப்பதாகவும் பிறகுதான் விவரங்கள் வழங்கப்படும்.
“நாட்டை நடத்துவதற்கு எங்களுக்கு ஒரு வலுவான, நிலையான அரசாங்கம் தேவை. பாரிசன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதில் அடங்குவர். நாடாளுமன்றத்தை கலைப்பது மாமன்னரின் உரிமையாகும். திங்கள்கிழமை இரவு அவருடன் பேசினேன்.
இது பின் கதவு அரசாங்கம் அல்ல. இது ஆதரவு பெற்ற அரசாங்கமாகும். நிச்சயமாக இது ஒரு மலாய் பெரும்பான்மை அரசாங்கமாகும். ஆனால் ஒவ்வொரு சமூகமும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும்.