பெட்டாலிங் ஜெயா: பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் தா சின் மலேசியர்களுக்கு புதன்கிழமை (செப்டம்பர் 23) சிறப்பு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முஹிடினின் முகநூல் பக்கத்தில், சிறப்புரை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சிறப்புரை ஆர்டிஎம், பெர்னாமா டிவி, டிவி 3 மற்றும் ஆஸ்ட்ரோ அவானி ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும். சிறப்புரையின் மறு ஒளிப்பரப்பு இரவு 9 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பப்படும்.