கொரோனா வைரஸ் பரவலால் நம் அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் ஆளும் கம்யூ. பொலிட் பீரோ உறுப்பினருமான யாங் ஜியேசி தலைமையிலான உயர்மட்ட குழு நேற்று இலங்கை வந்தது. இவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை இன்று சந்திப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான இரண்டாம் தவனை கடன் தொகையை அளிப்பதற்கே இந்த குழு வந்துள்ளதாக கூறப்படுகிறது.