கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வில் பங்கேற்ற ஒருவருக்கு, விவரிக்கப்படாத நோய் ஏற்பட்டதன் காரணமாக, அந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை உட்பட, தங்களது கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான மருத்துவ பரிசோதனைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளோம் என Johnson & Johnson நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நோய்வாய்ப்பட பங்கேற்பாளரின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும், இந்த பங்கேற்பாளரின் நோயைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம் என்றும், தீவிரமாக ஆராய்ந்த பின் உண்மை நிலை குறித்த கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாக நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் எடுத்த இந்த முடிவை அடுத்து, 60,000 நோயாளிகளின் மருத்துவ பரிசோதனைக்கான ஆன்லைன் சேர்க்கை முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது தனி அதிகாரம் கொண்ட, நோயாளி பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.