பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட மூன்று வகையான பாலாடைக் கட்டிகளைச் சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளச் சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது.
இந்தத் தயாரிப்புகளில் ஆபத்தான நுண்ணுயிர் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்தது.