தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சண்டிகரில் நடக்கிறது. தலைவி படத்தில் நானே தமிழ் வசனம் பேசி நடிப்பேன். எனக்கு டப்பிங் வேண்டாம் என, கூறி விட்டார். இதற்காக, தமிழில் பேசுவதற்கு முறையாக கற்று வருகிறார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக் குழுவினர்.