தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
திடீரென ஏற்பட்ட கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து கொடுக்க முடிவு செய்து அதன் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
தற்போது இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 22 ஆம் தேதி காலை 9.09 மணிக்கு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த சிறிய புரோமோ வீடியோவை நடிகர் மகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதே தினத்தில் சிம்பு சமூக வலைதளப் பக்கங்களில் இணைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Arrival of #SilambarasanTR pic.twitter.com/f32BX82d0Z
— Mahat Raghavendra (@MahatOfficial) October 20, 2020