சுற்றுலா சென்ற 6 சிறுவர்கள்….மக்கள் சோகம் !

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவபேட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் சுற்றுலா சென்றனர். அருகிலுள்ள வசந்தவாடா பகுதிக்கு சென்ற அவர்கள் அப்பகுதியில் செல்லும் ஓடையில் குளித்தனர்.

அந்த 6 சிறுவர்கள் மட்டும் நீண்ட நேரம் குளித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சிறுவர்கள் 6 பேரும் நீரோடையில் மூழ்கினர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சிறுவர்களை தேடினர். மேலும் தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் சிறுவர்களை தேடும் பணியில் இறங்கினர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சிறுவர்கள் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மற்ற 2 சிறுவர்களின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here