புத்ராஜெயா: 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் குறித்த தங்கள் கட்சியின் கருத்துக்களை முன்வைக்க அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நிதி அமைச்சரை சந்தித்து வருகின்றனர். இது நவம்பர் 6 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.
டத்தோ ஶ்ரீ தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் மற்றும் பக்காத்தான் ஹரப்பனின் பிரதிநிதிகள் இடையே தற்போது விவாதங்கள் நடந்து வருகின்றன. பக்காத்தான் ஹரப்பன் பிரதிநிதிகளில் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், பி.கே.ஆர் பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் மற்றும் பார்ட்டி அமானா நெகாரா தலைவர் முகமட் சாபு ஆகியோர் அடங்குவர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (நவ.1) காலை அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ அஹ்மத் மஸ்லான், அம்னோ இளைஞர் தலைவர் டத்தோ டாக்டர் அசிராஃப் வாஜ்தி துசுகி மற்றும் உச்ச சபை உறுப்பினர்கள் டான் ஸ்ரீ நோ ஓமார் மற்றும் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் கதிர் ஆகியோர் தெங்கு ஜஃப்ருலை சந்தித்து பட்ஜெட் 2021 குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பிஏஎஸ் மற்றும் கபுங்கன் பார்ட்டி சரவாக் பிரதிநிதிகளும் இதற்கு முன்னர் நிதியமைச்சரை சந்தித்தனர்.