இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 3,872 குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: 2019 செப்டம்பர் மாதத்தில் 6,061 ஆகவும், 2018 ல் 5,758 ஆகவும் ஒப்பிடும்போது செப்டம்பர் 2020 நிலவரப்படி 3,872 குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக டத்தோ சித்தி ஜைலா முகமட் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை (டிசம்பர் 14) மக்களவையில் பேசிய  பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் நிதிப் பிரச்சினைகள், போதைப் பழக்கங்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் ஆகியவை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு முக்கிய காரணங்கள் என்று கூறினார்.

இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 1,120 உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்காகவும், 1,373 பாலியல் துஷ்பிரயோகங்களுக்காகவும், 131 உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகங்களுக்காகவும், 1,251 குழந்தைகள் புறக்கணிப்பு ஆகியவை என  சித்தி ஜைலா கூறினார்.

பூச்சோங்கில் ஒரு தந்தை தனது 18 மாத மகளை குத்திய சம்பவத்தை மேற்கோள் காட்டி வழக்குகள் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த சப்ரி அஜித் (பிஏஎஸ்-ஜெராய்) கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான முக்கிய காரணங்கள் என்ன, சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான திட்டங்கள் எவ்வளவு பயனுள்ளவை என்பதை அறிய சப்ரி விரும்பினார்.

இது குறித்து 414 பள்ளிகளில் 96,797 குழந்தைகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு திட்டங்களில் பங்கேற்றுள்ளதாக சித்தி ஜைலா தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகத்தை நிவர்த்தி செய்யும் பொறுப்பு அரசாங்கத்தின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக சமூகத்தின் மீதும் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here