ஜாலான் சிம்பாங் பூலாய்- கேமரன் ஹைலண்ட்ஸின் 27வது மைலில் திடீரெனெ ஏற்பட்ட நிலச்சரிவில் வாகனம் ஒன்று புதைந்துள்ளது

ஈப்போ, டிசம்பர் 2 :

ஜாலான் சிம்பாங் பூலாய்-கேமரன் ஹைலண்ட்ஸின் 27வது மைலில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு வாகனம் புதைந்துள்ளது.

நிலச்சரிவு காரணமாக சாலையின் இருபுறமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இடிபாடுகளுக்கு அடியில் ஒரு வாகனம் புதைந்துள்ளது எனினும், பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

“பிற்பகல் 1.44 மணிக்கு இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. ஒரு வாகனம் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,” என்று அவர் கூறினார்.

பேராக் பொதுப்பணித் துறையின் (PWD) செய்தித் தொடர்பாளர், திணைக்களத்தின் ஒரு குழு சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது என்றார்.

“இது தொடர்பான மேலதிக தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும்,” என்று அவர் கூறினார்.

மேலும் சமீபத்தில் நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த இருவழி கூட்டரசு நெடுஞ்சாலை FT059 தாப்பா-ரிங்கிலேட் (கேமரன் ஹைலாண்ட்ஸ்) சாலை இன்று மாலை 5 மணி தொடங்கி அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் திறக்கப்படும் என்று பேராக் பொதுப்பணித் துறை (JKR) அறிவிருந்த வேளையில், இப்புதிய நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here