மதுரை:
விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. வளரும் ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது, யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவர்.
நேற்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொரிக்கம்பட்டி பெருமாள்கோவில்பட்டி குன்னம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டதால் விழா களைகட்டி இருந்தது.
இந்த விழா சாதி மத வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது. மேலும் குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோவிலில் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.