புதுடெல்லி-
தேசிய அளவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். மேலும், தேசிய அணு கால அளவு பாரதிய நிர்தேஷக் திரவியா ஆகியவற்றை துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய சுற்றுச்சூழல் தர நிர்ணய ஆய்வகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்திய விஞ்ஞானிகள் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளனர். விஞ்ஞானிகளால் நாடு பெருமை கொள்கிறது. உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்க உள்ளது.