சபரிமலை :
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 31-ந்தேதி முதல் பூஜை நடைெபற்று வருகிறது.
தற்போது கோவிலில் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சிகர நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் என்.வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மகர விளக்கு தினமான வருகிற 14- ஆம் தேதி ஆன்லைனில் தரிசனத்திற்கான முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்களுக்கு கண்டிப்பாகத் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் உள்பட கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ்களை பக்தர்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.