புதுச்சேரி-
இதற்காக நிவாரணம், மறுவாழ்வுத்துறை செயலர் அன்பரசு தலைமையிலான அதிகாரிகள் காரைக்காலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது..
இக்கூட்டத்தின் விவாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் காரைக்கால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், நோய் தொற்று குறைந்த பகுதியாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா பரிசோதனையை 500- இல் இருந்து 1000 ஆக உயர்த்திடவும், அதனை தனியார் மருத்துவக்கல்லூரி ஒத்துழைப்புடன் செய்திடவும் முடிவு செய்யப்பட்டது.
அங்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கொரோனா கட்டுப்பாட்டு அறை இன்று செவ்வாய்க்கிழமை) முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தை குறைத்திட 7 அம்சங்கள் கொண்ட செயல்திட்டங்களை 7 அதிகாரிகள் மூலம் அமல்படுத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.