திருத்தணியில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திய காட்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மூலவருக்கு தங்க கவசம், தங்கவேல் போன்றவை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான பழனிக்குமார், கோவில் தக்கார் ஜெய்சங்கர், உதவி ஆணையர் ரமணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.