இன்று நள்ளிரவு தொடங்கி 19ஆம் தேதி வரை எரிப்பொருள் விலையில் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா: பிப்ரவரி 13 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கும்.

RON97 மற்றும் RON95 ஆகிய இரு சில்லறை விலைகளும் முறையே லிட்டருக்கு RM2.23 முதல் RM2.26 ஆகவும், ஒரு லிட்டருக்கு RM1.93 RM1.96 ஆகவும் முறையே மூன்று சென் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.11 இலிருந்து RM2.15 ஆக நான்கு சென் அதிகரிக்கும்.

“உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்” என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தானியங்கி விலை நிர்ணய பொறிமுறையின் (ஏபிஎம்) கீழ், ஜனவரி 5,2019 அன்று வாராந்திர எரிபொருள் விலை பொறிமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு RM2.05 மற்றும் RM2.15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ  ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

முந்தைய பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் 2019இல் அமல்படுத்திய விலையை ஒப்பிடும்போது, ​​RON95 மற்றும் டீசலுக்கான புதிதாக அறிவிக்கப்பட்ட விலைன் குறைவாக உள்ளது என்று தெங்கு ஜஃப்ருல் கூறினார். இது RON95 க்கு லிட்டருக்கு RM2.08 மற்றும் டீசலுக்கு RM2.18 ஆகும்.

“மானிய ஒதுக்கீட்டின் மூலம் வாரந்தோறும் நிர்ணயிக்கப்படும் உண்மையான சந்தை விலைக்கும் வாராந்திர சில்லறை விலைக்கும் உள்ள வித்தியாசத்தை அரசாங்கம் உள்ளடக்கும்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here