அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1989-ஆம் அண்டி அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1989- ஆம் ஆண்டு முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் 11- ஆவது முதலமைச்சராக முதல்முறையாக பதவியேற்றுக் கொண்டார்ர்.
தமிழகத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் கலைமாமணி விருது, தங்க மங்கை விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார். தாயுள்ளம் கொண்டு ஏழைகளின் துயர் நீக்குவதால் ‘அம்மா’ என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார்.