கோவிட் தொற்று பாதிப்பு 1,345 – மீட்பு 1,782

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) 1,354 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 323,763 ஆக உள்ளது.

ஒரு ட்வீட்டில், சுகாதார அமைச்சகம் அதே 24 மணி நேரத்திற்குள், நான்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் இறப்பு எண்ணிக்கை 1,210 ஆக உள்ளது.

மேலும் 1,782 நோயாளிகள் மருத்துவ வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதாவது நாடு முழுவதும் 306,274 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். மொத்தத்தில் நாட்டில் 12,279  சம்பவங்கள் செயலில் உள்ளன.

இந்த எண்ணிக்கையிலிருந்து, 158 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர். 71 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here