சுகாதார அமைச்சகம் இன்று 5,809 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,541,147 ஆக உள்ளது. தேசிய அளவில் வாரக்கணக்கில் சரிந்து வந்த மருத்துவமனைகளில் சேரும் போக்கு, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஏழு நாட்களில் 2.95 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கூறப்பட்ட காலத்தில் கோலாலம்பூர் (+85.0%), மலாக்கா (+41.2 %), நெகிரி செம்பிலான் (+20.4%), பேராக் (+16.4%) மற்றும் ஜோகூர் (+12.0%) ஆகியவை இந்த உயர்வுக்கு பெருமளவில் பங்களித்துள்ளன. நோய்த்தொற்று விகிதம், அல்லது R-naught மதிப்பு 1.04 ஆக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 31 முதல் இந்த எண்ணிக்கை 1.0 க்கு மேல் சென்றது இதுவே முதல் முறை.
1.0க்கு மேல் நீடித்த மதிப்பு வைரஸின் அதிவேகப் பரவலுக்கு வழிவகுக்கும். 1.0க்கு கீழ் உள்ள மதிப்பு வைரஸின் பரவல் குறைவதைக் குறிக்கிறது அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சகம் அதன் CovidNow போர்ட்டலில் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்களின் புதிய தொற்றுகளின் விவரத்தை வெளியிடும்.
6,517 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நேற்றைய (நவம்பர் 12) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு: சிலாங்கூர் (1,752), சபா (611), கிளந்தன் (521), ஜோகூர் (517), கோலாலம்பூர் (441), பகாங் (431), சரவாக் (418), கெடா (352), நெகிரி செம்பிலான் (299), மலாக்கா (299), பினாங்கு (254), பேராக் (243), தெரெங்கானு (243), புத்ராஜெயா (74), பெர்லிஸ் (54), லாபுவான் (8).