டத்தோ கெராமாட் சந்தையில் தீ

கோலாலம்பூர்: புதன்கிழமை (மார்ச் 17)  பிற்பகல்  டத்தோ கெராமட்டில் பசாரில் தீ விபத்து ஏற்பட்டது. புதன்கிழமை மாலை 5.26 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஸ்தாப்பாக், வாங்சா மஜு மற்றும் ஹாங் துவா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்குள்ள ஸ்டால்கள் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக இருந்தன. அவற்றுக்கிடையே எந்தவிதமான வகுப்பிகளும் இல்லை. இது தீ விரைவாக பரவ காரணமாக இருந்தது.

மாலை 6.25 மணியளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here