கோலாலம்பூர்: பெஸ்ரயா நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 26) காலை நான்கு சக்கர வாகனம் தீப்பிடித்தது. காலை 8.44 மணிக்கு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்ததாக நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்தில் 80% வாகனம் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. யாரும் இந்த விபத்தில் காயமடையவில்லை. தீ காலை 9.17 மணிக்கு முழுமையாக என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.