டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம்தேதி பிறந்தார்.
அலமேலு என்ற இயற்பெயருடைய பட்டா எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள் தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர்.
ஆனாலும் அந்த மரபுகளையும் தாண்டி பட்டம்மாள் தனது 4- ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார். அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி. கே. ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். பட்டம்மாள் 1939- ஆம் ஆண்டில் ஆர். ஈசுவரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
பட்டம்மாள் முறையாக கர்நாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
1929-ம் ஆண்டில் தனது 10- ஆவது வயதில்ல் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகுதான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக்கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார்.
பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் ஜப்பான், சிங்கப்பூர், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய ‘அகிகோ’வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.
பெற்ற விருதுகள்
* சங்கீத நாடக அகாடெமி விருது, 1962[5] * பத்மபூசன், 1971 * இசைப்பேரறிஞர் விருது, 1973 * சங்கீத கலாசிகாமணி விருது, 1978, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி * பத்மவிபூசன், 1998 * தேசியகுயில் * சங்கீத கலாநிதி * கலைமாமணி விருது.