தடுப்பூசி போட்டு இரண்டு வாரங்களாகியும், இன்னமும் வலியால் துடித்துவருகிறார் அவர்.
அவரின் மகன் ஆட்டிஸம் குறைபாடு கொண்டவன் என்பதால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால், யாரை கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டேனோ அவனையே என்னால் கவனித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார் லேய்
அவ்ரின் மகனான எய்டன் (13), அம்மாவின் தோற்றத்தைப் பார்த்து பயந்துபோய் அவருக்கு அருகிலேயே வருவதில்லையாம். இப்போது அவனை கவனித்துக்கொள்ள வேறு ஆள் ஏற்பாடு செய்திருக்கிறாராம் லேய்
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 100இல் ஒருவருக்கு இப்படி தோலில் பிரச்சினைகள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன் பிரச்சினையிலிருந்து விடுபட மருத்துவமனைகள் பல ஏறியும் பலனில்லை என்பதால் தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஒருவரை சந்திக்க இருக்கிறார் அவர்.