ஜெருசலேம்: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் நேற்று காஸாவில் இருந்த பிரபல செய்தி நிறுவனங்களான அல் ஜசிரா, மற்றும் அசோசியேட் பிரஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்கள் நொறுக்கப்பட்டன.
மொத்த காஸாவும் கடந்த 10 நாட்களாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. ஜெருசலேமில் அல் அக்சா மசூதியில் இஸ்ரேல் நடத்திய ரெய்டுக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் படை பதில் தாக்குதல் நடத்திய காரணத்தால் தற்போது ஹமாஸ் போராளி குழுவை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது.