முழு எம்சிஓவை சிறந்ததே; ஆனால் பொருளாதார மேம்பாட்டிற்கு 500 பில்லியன் செலவாகும்

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் முஹிடின் யாசின் தொலைகாட்சி பேட்டியில் முழு எம்சிஒவை அமல்படுத்த அரசாங்கம் விருப்பம் கொண்டிருப்பதாகவும் ஆனால் பொருளாதார  நடவடிக்கைளை மேம்படுத்த அரை டிரில்லியன் ரிங்கிட் அளவுக்கு அரசாங்கத்திற்கு செலவாகும் என்று கூறினார்.

இது ஒரு நாளைக்கு 6,000க்கும் மேற்பட்ட தொற்றினை  கடந்திருப்பதால்  கோவிட் -19 நோயை கட்டுபடுத்தும் வகையில் முஹிடின் அரசாங்கத்திற்கு மற்றொரு முழு பூட்டுதலை விதிக்க அழுத்தம் வழங்கப்பட்டு வருகிறது.

 இது அதிகமான மக்கள் வேலை இழக்க நேரிடும், இதனால் அவர்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் புதுப்பிக்க முடியாது என்பதால் மொத்த பூட்டுதலை அமல்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்தது.

மொத்தமாக பூட்டுதல் சிறந்த நடவடிக்கை என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், அரசாங்கம் இயக்கங்கள் மற்றும் வணிக நேரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தது. மேலும் வீட்டிலேயே தங்குவதற்கும், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியது.

பொருளாதாரத்தை புதுப்பிக்க ஆறு உதவி திட்டங்கள் வழி கடந்த ஆண்டு அரசாங்கம் RM340 பில்லியனை செலவிட்டதாக முஹைதீன் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் 18 முதல் மே 3 வரை அனைத்து பொருளாதாரத் துறைகளும் மூடப்பட்டதால் ஒரு நாளைக்கு சுமார் RM2.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக முஹைதீன் கூறினார். ஒரு புதிய பூட்டுதல் போடப்பட்டால் மக்களுக்கு உதவவும், நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் RM500 பில்லியன் அல்லது அரை டிரில்லியன் ரிங்கிட் தேவைப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here