பழம்பெரும் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன்

 மாரடைப்பால் உயிரிழப்பு!

பழம்பெரும் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.

கமல் ஹாசன் நடித்த கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, மகாராசன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரங்கராஜன். அத்துடன் முத்து எங்கள் சொத்து, அடுத்தாத்து ஆல்பட் ,மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ஜி.என். ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவரின் ரங்கராஜனின் இறுதி சடங்கு சென்னை நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெறுகிறது. மறைந்த இயக்குநர் ஜி.என்.

ரங்கராஜனுக்கு சக்குபாய் என்ற மனைவியும் குமரவேல் என்ற மகனும், பரமேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவரின் மகன் குமரவேல் இவரின் தந்தை ஜி.என். ஆர். குமரவேல் நினைத்தாலே இனிக்கும் ,யுவன் யுவதி, ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து சினம் என்ற படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here