கோவிட் -19 புதிய தொற்று 5,271 ஆக பதிவு செய்திருக்கும் வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பேர் கோவிட் தொற்றினால் பலியாகியிருக்கின்றனர். தொற்றின் பாதிப்பு 4 நாட்களாக குறைந்திருக்கும் வேளையில் இறப்பு விகிதம் குறையவில்லை.
மொத்தம் 902 நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருவதாகவும், 447 சுவாச கருவி உதவி தேவைப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.





















