– குவாட் நாடுகள் உறுதி!
இந்த 100 கோடி தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் ‘குவாட்’ அமைப்பின் வாக்குறுதி நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் இந்தோ பசிபிக் கொள்கை இயக்குநர் கர்ட் காம்பெல் கூறியதாவது:-
நாங்கள் இது தொடர்பாக இந்தியாவுடனும், எங்கள் கூட்டாளிகளுடனும் தொடர்ந்து நெருங்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். இந்திய நண்பர்களுக்கு இது ஒரு கடினமான கால கட்டம் என்பது வெளிப்படையாகவே தெரியும்.
தனியார் துறையிலும், அரசுடனும் எங்கள் கூட்டாளிகளுடனான ஆலோசனை, அடுத்து ஆண்டுக்குள் தென்கிழக்கு ஆசியாவுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்குவதற்கான பாதையில் நாங்கள் உறுதிபட உள்ளோம் என்பதை காடடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மார்ச் மாதம் 12- ஆம் தேதி காணொலி காட்சி வழியாக நடத்திய சந்திப்பில் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசனும், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவும் கலந்துகொண்டு பேசியது நினைவுகூரத்தக்கது.