ஷா ஆலாம் – மலேசியாவில் கோவிட் -19 உறுதி செய்யப்பட்ட தொற்றின் எண்ணிக்கை சனிக்கிழமை 5,911 என பதிவாகிய பின்னர் நாட்டில் மொத்த தொற்று எண்ணிக்கை 691,115 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்தத்தில், சிலாங்கூரில் தினசரி அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் 2,111 ஆக பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் (770), சரவாக் (569), ஜோகூர் (498), கோலாலம்பூர் (483), பேராக் (245) என்று அவர் ஒரு பதிவில் தெரிவித்தார்