பெட்டாலிங் ஜெயா ( ஜூன் 22) :
பசுமாடுகளுக்கு வழிவிட நினைத்து, சாலையில் வளைந்த போது, மரத்தில் கார் மோதி பதின்மவயது வாலிபர் மரணம் அடைந்துள்ளார்.
அலோர் காஜா – மலாக்கா தெங்கா-ஜாசின் நெடுஞ்சாலை (AMJ) ஜாலான் செர்காம்- மெர்லிமாவ் , 17 கிலோமீட்டரில் நேற்றுக் (ஜூன் 21) காலை 6.30 மணியளவில் நடந்த, இந்த சம்பவத்தில் சந்தை தொழிலாளியான முகமட் அய்ருல் ஹகிமி சுயிப் (17) பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சியான முகமட் ஸரீஃப் மஸ்லான், (37) சம்பவம் பற்றிக் கூறியதாவது “ சம்பவம் நடந்தபோது, அந்த இடம் மிக இருட்டாக இருந்தது, பாதிக்கப்பட்டவர் லெபு AMJ யின் வலது பாதையில் மாடுகளைத் தவிர்க்க முயற்சிப்பதைக் கண்டார் என்றும் “பாதிக்கப்பட்டவரின் கார் அந்த நேரத்தில் தனக்கு முன்னால் இருந்தது, சாலைகள் கடக்கும் பசுக்களைத் தவிர்க்க முயன்றபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தான் அவசர சேவையை (emergency) உடனடியாக உதவிக்கு அழைப்பதற்கு முன்பு, காரில் ஒரு பாதிக்கப்பட்டவர் இருப்பதை தான் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் மெர்லிமாவ்வில் இருந்து செர்காம் செல்லும் வழியில் புரோட்டான் ஈஸ்வரா ஏரோபேக் வகை காரை ஓட்டி வந்ததாகவும், “கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் வேகமாக மோதியதன் விளைவாக, மார்பில் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டர் என்று மருத்துவக் குழுவினரால் உறுதி செய்யப்பட்டது,” என்றும் ஜாசின் மாவட்ட காவல்துறைத் தலைவர் மிஸ்பானி ஹம்டான் தெரிவித்தார்.
இவ்விபத்தில் இறந்தவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜாசின் மருத்துவமனை தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது வாகனம் இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்காக கணினிமயமாக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு (புஸ்பகோம்) அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
“சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 41 (ஏ) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, இது தொடர்பாக மேலும் விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன” என்று அவர் கூறினார்.
-எஃப்.எம்.டி