இளவரசர்கள் வில்லியம்-ஹாரியை சமாதானப்படுத்தும் முயற்சி

 வாய்ப்பு அமையவில்லை!

பிரிட்டன்:

பிரிட்டன் இளவரசி டயானாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக இளவரசர் ஹாரி பிரிட்டனுக்கு சென்றபோது குடும்பத்தினருடன் சமரசம் ஆவதற்கான சரியான வாய்ப்புகள் அமையவில்லை .


பிரிட்டன் இளவரசி டயானாவின் 60- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் வகையில் கென்சிங்டன் மாளிகையில் அவருடைய உருவச்சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.


இதில் இளவரசியின் உருவச் சிலையை அவருடைய இரு மகன்களான இளவரசர்கள் வில்லியம், ஹாரி இணைந்து திறந்து வைத்தனர். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டது.

ஆனால், இந்த நிகழ்ச்சியின்போது இளவரசர்கள் வில்லியம், ஹாரி இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் இளவரசி டயானாவை கௌரவப்படுத்தும் வகையில் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக அரச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனால் செப்டம்பர் மாதத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சி சகோதரர்களுக்கு இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடப்பதற்கு உதவியாக இருக்கும் என்று அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here