மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆடவர் வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

அம்பாங், ஜூலை 10 :

தாமான் புத்ராவில் உள்ள ஒரு வீட்டில், மின் விசிறியில் (ceiling fan) தூக்கில் தொங்கிய நிலையில் 58 வயது ஆடவர் சடலமாக கிடந்தார்.

இறந்தவரது உடல் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) நண்பகல் 1.45 மணியளவில் அவரது மனைவியால் கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா ACP முகமட் ஃபாரூக் எஷாக் தெரிவித்தார்.

“வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைக்குச் சென்றிருந்த அவரது மனைவி, வீட்டிற்கு திரும்பிய போது, தமது படுக்கையறையின் மின்விசிறியில் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடக்கக் கண்டார் என்றும் இறந்தவரின் மனைவி கடைக்கு சென்றிருந்த வேளை அவர்களது மகள் வீட்டிலேயே இருந்தாள் என்றும் ஆனால் அங்கு என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை,” என்றும் அவர் இன்று (ஜூலை 10) கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது அவரது வணிகம் மூடப்பட்டதால், இறந்தவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் அதற்காக ஒரு சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 14 அன்று அவர் தனது முதல் கோவிட் -19 தடுப்பூசியை பெற்றார் என்றும் அவர் கூறினார்.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ACP முகமட் ஃபாரூக் தெரிவித்தார்.

“இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் மன அழுத்தங்களால் பாதிக்கப்படுபவர்கள் பின்வரும் இடங்களை அணுகி தமக்கு தேவையான உளவியல் ஆதரவு சேவையை பெற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனநல உளவியல் உளவியல் ஆதரவு சேவை (03-2935 9935 அல்லது 014-322 3392); Talian Kasih (15999 அல்லது WhatsApp 019-261 5999); ஜக்கீமின் குடும்பம், சமூக மற்றும் சமூக பராமரிப்பு மையம் (WhatsApp 0111-959 8214); மற்றும் நட்பு கோலாலம்பூர் (03-7627 2929 அல்லது www.befrienders.org.my/centre-in-malaysia).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here