சமூக வலைத்தளங்கள் சுதந்திரமானவை – சுந்தர் பிச்சை
சில நாடுகளில் சமூக வலைதளங்களில் மீது சுதந்திரத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சமூக ஊடகங்கள், ஓ.டி.டி., தளங்களுக்குப் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த விதிகளைப் பின்பற்றவேண்டிய நிலைக்கு கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை செய்தி ஒன்றைக் கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனினும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
அந்த நாடுகளில் தகவல்களை வெளியிடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
வலுவான கட்டமைப்பு ஜனநாயக மரபுகள் , மதிப்புகளைக் கொண்ட நாடுகள் இணையத்தின் சிதைவுக்கு எதிராக நிற்க வேண்டும் என்றார்.
எல்லாம் சரிதான் ! இணையம் என்பது சமுதாயத்திற்கு எதிராக இல்லாமல் இருக்க வேண்டியதும் அவசியம் தானே!